நன்றி!

வருகை தந்தமைக்கு நன்றி! தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன!

Tuesday, November 2, 2010

தேவர் நினைவிடத்தில் தங்கக் கவசம்

மதுரை, அக். 30: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் அதிமுக சார்பில் தங்கக் கவசம் அமைக்கப்படும் என கட்சியின் பொதுச் செயலரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா கூறினார்.


பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் ஜயந்தி விழாவை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் சனிக்கிழமை மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களிடம் ஜெயலலிதா கூறியது:

தேவர் நினைவிடத்துக்கு முதன்முதலில் வந்த அரசியல் தலைவர் நானாகத்தான் இருக்கும். அதன் பிறகே இங்கு மற்றவர்கள் வந்தார்கள் என்பதே உண்மை. இங்கே அரசியல் பேசக்கூடாது. தேவர் பெருமகனார் பெயரை பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்பதால், அவரது நினைவிடத்தில் தங்கக் கவசம் அணிவிக்கவேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆகவே, அதிமுக சார்பில் தங்கக் கவசம் அணிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

ஜெயலலிதா வருகையை முன்னிட்டு போலீஸôர் மேற்கொண்ட பாதுகாப்பு குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, திருப்தி என்றார் ஜெயலலிதா.

சென்னையிலிருந்து மதுரைக்கு விமானம் மூலம் வந்த ஜெயலலிதா, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பசும்பொன்னுக்கு வந்தார். பின்னர் மதுரை திரும்பி சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றார்.

No comments:

Post a Comment